Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

ஏகாந்தமே ஏந்திழை மடி(அத்தியாயம்-11)

Joined
May 18, 2024
Messages
29
வெயினியின் திமிர் பார்வை ருத்ரனை அசைக்காமல் இல்லை...அவளது ஆழி விழியின் ஆழத்தில் வீழ்ந்தவன் மீள முடியாமல் மீண்டு வந்தான்...

"என்ன சொன்ன? ஆம்பளையானு கேட்டால நீ! என்னைப் பாத்து" என சிங்கமென கர்ஜித்து அவள் கழுத்தை விடுத்தான்.. தன் பின்னந்தலையை அழுந்தக் கோதினான் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான் ருத்ரன்...

அப்பொழுதாவது வெயினி வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கலாம் விதி யாரை விட்டது..."ஆமாடா.. நீ ஒரு ஆம்பளையா? சொந்த நாட்டோட சொத்தை சூரையாடி வெளிநாட்டுகாரனுக்கு விக்கப் பாக்குற.. என் அனுமதி இல்லாம என்னை தொடுர.. நீ எல்லாம் எப்படி பட்ட ஆண்!" என வெயினி வார்த்தை விட்டாள்....

ருத்ரனின் கோவம் கண்ணை மறைத்தது... அவன் தன்னை ஆண் என நிரூபிக்க எண்ணி விட்டான் ... வெயினியின் பெண்மைக்குள் அவன் ஆண்மை திமிறியது... காதலோடு நடக்க வேண்டும் என பலர் எண்ணும் கூடல் ருத்ரன் போன்ற சிலராலும் , வெயினி போன்று வாய் சவடால் அதிகம் உள்ள பெண்ணாலும் நிலை மாறி நிகழ்ந்தது...

ருத்ரன் தான் ஆண் என வெயினிக்கு நிரூபித்தான்... மூன்று மணி நேரம் அவளை அகத்துறிஞ்சியும் அவன் அசுர வேட்டை முடியவில்லை ...பருக பருக திகட்டா அமுதமாக அவனுக்கு வெயினி தோன்றினாள்... ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக தான் ஆண் என நிரூபிக்க நடைபெற்ற வேட்டை, போக போக போதையாக மாறியது ருத்ரனுக்கு...பல பெண்களுடன் உறவு கொண்டவன் தான் .... தான் ராமன் என அவன் கூறவும் இல்லை.....எனினும் யாரையும் அனுமதி இன்றி தொடவுமில்லை... இவளிடம் இமயமே தலை வணங்கியது போல் அவனுக்கு பிரம்மை உண்டானது...

தன்னை பாதுகாத்துக் கொள்ள அவனிடம் போராடி வெயினி தோற்று அடங்கி விட்டாள்... முயல் குட்டி போல் இருக்கும் அவள் அவனிடம் இருந்து எவ்வாறு விடுதலை பெற முடியும்...
சிகரமென அவள் மேல் சரிந்து கிடந்தான் அவன்....

நேரம் இரவு ஒன்பதை தொட்டது... பாவம் என கருதினானோ? இல்லை அவனுக்கு போதும் என நினைத்தானோ? வெயினிக்கு விடுதலை கொடுத்தான் ருத்ரன்....வெயினியால் எழுந்து நிற்க கூட முடியவில்லை ...பல்லை கடித்துக் கொண்டாள்...,உதடுகளை இறுக்கமாக மூடக் கூட முடியவில்லை... பாதகன் அவளை பாடாய் படுத்தி விட்டான்... மெதுவாக எழுந்து நின்றாள் வெயினி .. அவள் அனுமதி இன்றி ருத்ரன் நடந்த முறை தவறு என்றாலும், நேரம் காலம் அறிந்து நாவடக்கம் செய்வது அவசியம் என்பதையும் வெயினி மறந்து விட்டாள் .. ஒரு செயலை செய்பவரை விட அதற்கு தூண்டுதலாக உள்ளவர்களுக்கு தான் பலன் அதிகம்...மெதுவாக அறையில் இருந்த குளியலறைக்குள் கட்டிலில் கிடந்த போர்வையால் மேனியை போர்த்திக்கொண்டு ,கைகளில் ருத்ரனின் தாண்டவத்தால் தாறுமாறாக கசங்கிய ஆடைகளையும் அள்ளிக் கொண்டு நீராட நுழைந்தாள் வெயினி....

ஷவரை திருகி விட்டு நீர் வடிய, அதன் கீழ் அமர்ந்து கொண்டு சத்தமின்றி கண்ணீர் வடித்தாள் பேதை ....நாளை கடைசி கட்ட பணி ஆகும்...இப்பொழுது நடந்ததை வெளியே சொன்னால் பாரிய பிரச்சினை ஏற்படும் ...இந்த ப்ரொஜெக்ட்கு ஆபத்தாக கூட இது முடியலாம்...என பலவாறு வெயினி சிந்தித்தாள்....

அவளது உடல் வலி மிகுதியாக இருந்தது... எனினும் கடமைகள் துரத்த, ஒருவாறாக தட்டுத் தடுமாறி ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்‌..
அவளது முகத்தை கூட ருத்ரன் பார்க்கவில்லை... எனினும் அவள் மென்மை அவனை நிலை குழைய செய்தது உண்மை தான்..

எப்போதும் போல் அவன் கம்பீரம் குறையாமல் வண்டியில் அமர்ந்து கொண்டு சிகரெட் புதைத்தான் ..அவள் அமைதியாக ஏறிக் கொண்டாள்... வண்டி கூடாரத்தை அடைந்ததும் ரத்னா அக்கா, எசக்கி ,மீனா என மூவரும் காத்துக் கொண்டு நின்றனர்..

வெயினியைக் கண்டதும் ரத்னா அக்கா தான் முதலில் பேசினார்.." என்னாச்சு மா வெயினி !மூஞ்செல்லாம் சிவந்து போய் இருக்கு "என அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டதோ என்று உடலை தொட்டு பார்த்து சோதித்தார் அவர்.."அதெல்லாம் இல்லகா" என அவள் கூற ;"என்னடி உதட்டுல வெடிப்பு என மீனா கேட்கவும், "என்னடா மாப்ள இது கை சிவந்து கன்றி போய் இருக்கு "என எசக்கியும் கேட்டான்...

ஆள் மாறி ஆள் கேள்வி கேட்க வெயினிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.... உண்மையைச் சொன்னால் "வெண்ணெய் திரண்டு வர தாழி உடைந்தது போல" நிலைமை தலை கீழாக மாறி விடும் என்று ;"தலை சுத்தல் மயக்கம் போல வந்துச்சு.. அது தான் இப்படி இருக்கேன்.. ஹோட்டல்ல இருந்து வரவும் அது தான் லேட் ஆச்சு" என வெயினி கூற ;"கை ஏன் சிவந்து இருக்கு" என எசக்கி திரும்பவும் அதே கேள்வியை கேட்டான்..." அதுவா மாடி படிக்கட்டுல இருந்து விழ பாத்தேன்... ருத்ரன் தான் என் ஒரு கைய பிடிச்சாரு.. அவரு வலிமைக்கு இழுத்து பிடிக்கவும் தான் கை சிவந்து போச்சு" என அழகாக பொய் சொன்னாள் வெயினி...

உள்ளே வர அசோக் கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்தான்... வெயினியைக் கண்டதும் "மேடம் "என எழுந்து கொள்ள "நீங்க இருங்க .. வேலைய பாருங்க அசோக் "எனக் கூறிய வெயினி தடுமாறி விழப் போக அசோக் தான் அவளைப் பிடித்தான் ...சுமி தூங்கிக் கொண்டிருந்தாள்...
" என்னாச்சு மேடம்" என அசோக் கேட்க; இல்லை கால் தடுக்கிட்டு என சமாளித்தாள் வெயினி...

ரத்னா அக்கா உள்ளே வந்து" வா சாப்பிடலாம்" என அழைக்க அவளுக்கு சாப்பிட மனது வரவே இல்லை.." அக்கா வார வழில சாப்டேன்.. நீங்க எல்லாரும் சாப்டாச்சா" என அவள் கேட்க" ஆமாமா சாப்டாச்சு.. மாப்ளை தம்பி எங்கயோ வெளியே போறாரு போல" என ரத்னா அக்கா கூற, அதெல்லாம் வெயினி செவியில் விழவே இல்லை...

ருத்ரனுக்கு தூக்கம் வரவில்லை... நாளை அவனது திட்டத்தின் கடைசி நாள்...அது மட்டும் அன்றி வெயினியை தான் நடத்திய விதம் சரியா? தவறா? என அவன் யோசிக்கிறான் என நாம் நினைத்தால் அது தவறு... அவளின் மென்மை, யாரிடமும் கிடைக்காத நிம்மதி என அவன் எண்ணத்தில் வண்ணம் சேர்த்து கொண்டிருந்தது வெயினியின் சிந்தனை...எது எவ்வாறாயினும் அவனுமே உண்ணவில்லை... அனைவரையும் பல நினைவுகளை அசை போட வைத்த படி தூக்கம் அரவணைக்க விடியலின் ஒலி செவி வழி நுழைந்தது....

இன்றைய நாளில் இறைவன் தன் திருவிளையாடலை நிறைவேற்ற தீர்க்கமாக துணிந்து விட்டான்...
வெயினி ஆழ்கடலோடிகளில் டெலிபதி தெரிந்தவர்களை அழைத்து பேச ஆரம்பித்தாள்...." செய்து முடிக்க வேண்டியவை இதன் முக்கியத்துவம் எல்லாம் நீங்க அறிஞ்சி இருப்பீங்க... இருந்தாலும் டீம் ஹெட்டா இத சொல்லனும்னு நினைக்றேன்... அது மட்டும் இல்ல இது என் கடமையும் கூட" என அனைத்தையும் எடுத்து கூறினாள்...

அசோக் மற்றும் ஏனையோர் கடலினுள் செல்ல தயாராகி விட்டனர்....ஆழமானி, வெப்பமானி, புலன்மானி ,ஒளிப்பாய்ச்சி, கணினி, ஊடுருவி நோக்கி ,மிதவைகள் என அனைத்தையும் சரி பார்த்தாள் வெயினி....ருத்ரன் இன்று கடலினுள் செல்லவில்லை.... அவன் ஆட்கள் மாத்திரமே செல்கின்றனர்... வெயினி, எசக்கி ,கவி மூவரும் கப்பலில் கருவிகள் மூலம் சமிக்ஞைகள் மற்றும் தகவல்களை பெறுவதாகவும், வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது... ரவி இன்னும் கூடாரத்திற்கு வரவில்லை....

இறைவனை மனதில் எண்ணிய படி இளவெயினி இயந்திர படகில் ஏறினாள்...
எல்லோரும் கடலில் ஆராய்ச்சிக்கான மையப் பகுதியில் நின்றார்கள்... ஆழ்கடலோடிகள் கடலினுள் இறங்கி தளப்பணியில் ஈடுபட்டனர்.. வெயினி நினைத்தது போன்று அவள் தேடிய பொருட்கள் கிடைத்தன... மனம் நிறைந்த மகிழ்வுடன் அவற்றை அவள் பார்த்தாள்... கண்களில் மிகுந்த ஆர்வம் ,மனம் நிறைந்த பூரிப்பு ,விழிகள் நீரை தத்தெடுக்க எசக்கியை அணைத்தாள்... அவளது கஷ்டத்திற்கு கை மேல் பலன் கிடைத்தது....

அனைத்தையும் அரிய பொக்கிஷமாய் கடலில் இருந்து கவர்ந்து கொண்டு வெயினியும் குழுவினரும் கரையை அடைய நேரம் மாலையை தொட்டது...
தலைமை காரியாலயத்திற்கு அனைத்து ஆவண புகைப்படங்களையும் அனுப்பி விட்டு மீனா, சுமி மற்றும் ரத்னா அக்காவிடம் வெயினி இது பற்றி கூற ஆரம்பித்தாள்....

"குமரி கண்டத்தில் வாழ்ந்த மக்கள் ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய ஒரு பறக்கும் விமானம் வெச்சு இருத்ததா சொல்லப்படுது...அது தான் கால பயணம் செய்ற வாகனமா இருக்கலாம்னு அறிவியல்ல ஒரு அனுமானம் இருக்கு..அது மட்டும் இல்லாம இராவணன் புஷ்பக விமானத்துல தான் சீதாவ இலங்கைக்கு கூட்டி போனாருனு சொல்றோம்... அவருகிட்ட நாலு விமானம் இருந்ததா ஒரு ஆதாரம் இருக்கு... இராவணனோட உண்மையான பெயர்
நிலவழகி பாண்டியன்... இலங்கைல ஒரு பாண்டிய அரசன்னு சொன்னா இங்க தான் நாம சிந்திக்கனும்.... குமரி மக்களுமே பாண்டியர்கள் தான்... ஆக தமிழோட தொன்மை மற்றும் தமிழனோட திறமை பத்தி உலகம் அறியனும்.... கால பயணம் பற்றிய ஆய்வு புதிதல்ல எம் இனத்தவர் அதில் மேம்பட்டவர்னு எடுத்து கூறனும்... மேலும் கால பயணம் பற்றிய வரைவுகள் கூட விமானங்கள இருக்கலாம் "என்று வெயினி கூறிக் கொண்டு இருக்கும் போது வெளியில் நிறைய வண்டிகள் வருவது போல் சத்தம் கேட்டது....

ஒரு வேளை உயர் அதிகாரிகள் வந்து விட்டனர் என எண்ணிக் கொண்டு வெயினி, அசோக், கவி ,சுமி ,மீனா ,ரத்னா அக்கா என அனைவரும் வெளியே வந்தனர்... எசக்கி சமையல் பொருட்கள் வாங்க ஊரினுள் சென்றிருந்தான்.....

எல்லோரும் வெளியே வந்து பார்க்க கறுப்பு நிற ஜீப் வண்டிகள் நான்கு நின்றன... அனைத்தும் உயர் ரக வண்டிகள்... யார் இது என வெயினி நினைக்கையில் நால்வர் வண்டியில் இருந்து இறங்கி வெயினி அருகில் வந்தனர்...

"யார் இவர்கள்"என வெயினியிடம் மீனா கேட்க ; "தெரியலடி"என வெயினி கூறினாள்... "யார் நீங்க? எதுக்கு வந்திருக்கீங்க?" என கவி கேட்டான்.. அந்த நால்வரின் பின்னால் முகம் முழுவதும் கறுப்பு துணியால் மறைக்கப்பட்டு, கறுப்பு நிற ஆடை அணிந்தவாறு ஒருவன் வந்து நின்றான்...

நேராக வெயினியிடம் வந்து"நீ கண்டு பிடிச்ச எல்லாம் எனக்கு சொந்தமானது..கொடுத்துடு " எனக் கூற வெயினி விக்கித்து விட்டாள்... ருத்ரன் தான் இது என அவள் உணர்ந்து கொண்டாள்... ஏன்
என்றால் அவன் தானே இதற்காக அலைந்தான்...

தொடரும்.....
 

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி(அத்தியாயம்-11)
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top