Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -23)

Joined
May 18, 2024
Messages
29
அங்கு சென்று பார்த்த ருத்ரன் "வெயினி" என சத்தம் போட அவனுக்கு முதுகில் கத்தி இறங்கியது... பல்லைக் கடித்துக் கொண்டு யாரென திரும்பி பார்க்க, எசக்கி தான் கத்தியில் இருந்த இரத்தத்தை ருத்ரன் முகத்தில் சுண்டி விட்டுக் கொண்டிருந்தான்.....

சுமி, மீனா ,வெயினி மூவருக்கும் அதிர்ச்சி... ருத்ரன் சிரித்தான்.." நீ இங்க எப்டி தனியா வந்தனு அப்பவே நான் யோசிச்சேன்டா...அரைமணி நேரமா என் கண்ணுல யாரும் படல உனக்கு மட்டும் எப்டி ஆள் போன மாதிரி இருந்துச்சுனு நினைச்சேன்... எப்டி சரியா இடத்தை தேடி கண்டுபிடிச்சனு யோசிக்க மறந்துட்டேன்....சபாஷ்! முதுகுல குத்துற பொட்டை ... என ருத்ரன் எசக்கியை எட்டி உதைக்க எசக்கி லாவகமாக தப்பினான்..

எசக்கி இரு கைகளைத் தட்ட ஒருவன் வெயினி அருகில் சென்றான்..." ஏய் அவளைத் தொட்டா நீ! ரொம்ப கோரமான சாவை பாப்பாடா "என ருத்ரன் கத்தினான்..."அதுக்கு நீ! முதல் உயிரோட இருக்கனுமே" என கூறிக் கொண்டே, ரவி வந்து எசக்கி தோள் மீது கை போட்டான்...

ருத்ரன் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றான் ...அவனுக்கு வெயினி முக்கியம்.. "என்ன பாக்குற நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸ்... ஏம்மா மீனா! இவன் தான் உனக்கு வேணுமா?" என ரவி கேட்க எசக்கியைக் காட்டி கேட்கமீனா முகத்தை திருப்பினாள்...

"அவ கிட்ட இருந்து தப்பிக்க ஃப்ளாஷ் பேக்னு ஒரு குப்பை கதை சொன்னேன்... அதுக்கே அழுதா" அவ எனக் கூறி சிரித்தான் எசக்கி..அப்பொழுது கூட சுமியின் மைண்ட் வாய்ஸ் "எல்லாம் நடிப்பா கோவாலு ?"என நினைத்தது.. ருத்ரனுக்கு முதுகு புறமாக இரத்தம் வடிந்தது...ரவி அதிலேயே கட்டையால் அடித்தான்... ருத்ரன் அசையாது நின்றான்.... வெயினியின் கண்கள் தாரை தாரையாக நீரை இறைத்தது...

"அவனை புடிச்சு கட்டுங்கடா" என கூறினான் எசக்கி.. கழுத்தில் சங்கிலி பிணைக்கப்பட்டு இரு கைகளையும் கால் நடுவில் வைத்து இயந்திரத்தின் விளிம்போடு பிணைக்கப்பட்டான் ருத்ரன்...
வெயினி அழுவதைப் பார்த்த சுமி "அடியே! அக்கானு பாக்குறேன்... புருஷன் சீரியல் கில்லர்..கட்டிக்க இருந்தவன் களவாணி பய..பிரண்டு ஒரு மொல்லமாரி ,420... இவனையெல்லாம் பக்கத்துல வெச்சு இருந்த உன்னை தான் அவனுங்க கடத்தனும்... மீ ஏன்! வாழ வேண்டிய புள்ள "என முணுமுணுத்தாள்...

எசக்கி மெதுவாக நடந்து வெயினி அருகில் வந்தான்..." என்ன பாக்குற!" என ஒரு அறை விட்டான்... "இருந்தாலும் நீ! கில்லாடி தான்டி.. கால பயணம் கருவி பத்தி சொல்லிட்டு ,அத எப்டி இயக்குற உருவாக்குறனு கண்டுபிடிச்ச ஓலைச்சுவடிய எங்க கண்ணுக்கும், அரசாங்கத்தோட கண்ணுக்கும் தெரியாம மறச்சிட்டால.. அதுவும் கிடச்சி இருந்தா எப்பயோ என் வேலை சுலபமா முடிஞ்சு இருக்கும்... இதோ நிக்கிறாளே மீனா இவளுக்கு ஆயா வேலை பாத்திருக்க மாட்டேன் நான் என கூறி மீனாவின் குரல்வளையை நெருக்கினான் எசக்கி....

வலி மிகுந்த கண்களோடு மீனா அவனைப் பார்க்க," என்னடி பாக்குற! உனக்கு நான் கேக்குதா? என் லைஃப் ல எங்கேயும் நீ இல்லை...பல வருஷமா நானும் நிதீஷும் இது தான் பண்றோம்... உங்க கூட ஏதோ விதினு ஊர் உலகத்துக்காக பழகினேன்..."என எசக்கி கூற "ஹாஹாஹா "என கை தட்டி சிரித்தவன் நிதீஷ் யார்னு யோசிக்கிறீங்களா? ரவிட உண்மையான பேர் நிதீஷ் என்றான்....

"என்ன சில்லு வண்டு உன்னை ஏன் கடத்தினனு பாக்றியா ? உன் அக்காவை இங்க வர வைக்க நீ தான் எங்களுக்கு கிடச்ச துருப்பு சீட்டு "என்றான் எசக்கி....
ரவி வெயினிடம் வந்தான் .. "அந்த சுவடிகள் எங்க இருக்குனு சொல்லிடு" என்றான்... அவள் பேசவே இல்லை.... ருத்ரனிடம் சென்று ரவி சூவால் முகத்தை மிதித்தான்...வெயினியை பார்த்து சொல்லு என்றான்... "வெயினி எனக்கு எதுவும் ஆகாது நீ எதைப் பத்தியும் சொல்லாத "என ருத்ரன் கூற, எசக்கி வெயினி வயிற்றில் குத்தினான்.... அம்மா என அவள் அலறினாள்... "டேய் ஓத்தா! ஆம்பளயா இருந்தா கட்டை அவுத்து என் கிட்ட மோதுடா... பொட்டை! மயிரு! கட்டி போட்டு அடிக்கிற" என சீறினான் ருத்ரன்..

அவன் அருகில் வந்த எசக்கி முகத்தில் ஒரு பன்ச் விட்டான்... உதடு கிழிந்து இரத்தம் வந்தது ... "டேய் உன் கிட்ட இவ கண்டு பிடிக்றத கடத்த சொன்னதே நாங்க தான்... நீ! தான் வந்த வேலைய மறந்து இவ பின்னாடி நாய் மாதிரி அலஞ்சியே! அப்பவே புரிஞ்சிட்டு நீ இதுக்கு சரிபட்டு வரமாட்டேனு... அது தான் நாங்களே களத்துல இறங்கினோம்" என்றான் எசக்கி...

"அது எங்கனு சொல்லு" என ரவி வெயினியின் முடியை கொத்தாக பிடிக்க, "நான் சொன்னாலும் கொல்ல தானே போற கொலைகாரா... ஏன்டா என் அம்மா அப்பாவ கொன்ன?" என அவள் கேட்க, "அட என்ன இவ நசநசனு பேசுறா? "என அலுத்து கொண்டான் ரவி....

"டேய் "என அழைக்க பத்து அடியாட்கள் வந்தனர்... "இவங்கள பாத்துக்க" எனக் கூறி விட்டு ரவியும், எசக்கியும் "நாங்க அரைமணி நேரத்தில வருவோம்... அவ்வளவு தான் உங்க டைம்.. யோசிச்சு முடிவெடுங்க"... என வெயினி மற்றும் ருத்ரனைப் பார்த்து கூறி விட்டு சென்றனர்...

அவர்கள் அடித்ததில் வெயினி மிகவும் பலவீனமாக இருந்தாள்...ருத்ரனால் இரும்பு சங்கிலியை உடைக்க முடியவில்லை.. மீனாவும் ,சுமியும் வெயினி மற்றும் ருத்ரனின் நிலை கண்டு செய்ய வழி அறியாது திகைத்தனர்...

இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்கள்.. என அனைவரும் கதிகலங்கி இருக்க ,இறுக்கி பிடித்த டீசேர்ட் ,டென்னிம் பேண்ட் அணிந்து ஒரு ஆணும் பெண்ணும் கையில் துப்பாக்கியுடன் உள்ளே பூனை நடை போட்டு வந்தார்கள்.... வந்தவர்கள் ருத்ரன் அருகில் சென்று அவனை பிணைத்திருந்த சங்கிலிகளை சிறிய ரக கருவியால் சத்தமின்றி துளைத்து தூரமாக வீசினர்.. ருத்ரன் உடனே எழுந்து ஓடி வந்து வெயினியின் கட்டுகளை அவிழ்த்தான்.. அதே சமயம் அந்த ஆணும், பெண்ணும் சுமி மற்றும் மீனாவின் கட்டுகளை அவிழ்த்தனர்....

வெயினி வலுவிழந்து ருத்ரன் மடியில் வீழ்ந்தாள்.." எனக்கு வயிறு வலிக்குது" என அவள் அழுதாள்...கல் நெஞ்சம் கொண்ட ருத்ரன் கண் கலங்கினான்.. "நீங்க எல்லாரையும் கூப்டு போங்க" என தன் ஆட்களிடம் உத்தரவிட்டான்... அந்த ஆணும், பெண்ணும் வேறு யாரும் இல்லை ருத்ரனிடம் நன்றாக பயிற்சி பெற்று வெயினியின் வீட்டிற்கு வேலைக்காரர்களாக சென்ற கணவன் மனைவி தான்...

அந்த வேலையாட்கள் மூலம் தகவல் அறிந்து அசோக்கும் கவியும் வந்தனர்...
வெயினியை கை தாங்கலாக மீனாவும், சுமியும் வண்டியில் ஏற்ற "என்னாச்சு "என பதறிக் கொண்டு கவியும் ,அசோக்கும் ஓடிவர பின்னால் இருந்து துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டது...

எல்லோரும் கீழே குனிந்தனர்..." ஏய் கவி வெயினிய பத்திரமா வண்டில ஏத்து" என ருத்ரன் சத்தம் போட ,கவி அவசர அவசரமாக கார் கதவை திறந்து வெயினியை ஏற்றினான்.. "சுமி, மீனா ஏறுங்க "என அசோக் சத்தமிட அவர்கள் ஏறவும் "கவி வண்டிய எடு" என ருத்ரன் ஆணையிட வண்டி குதிரை வேகத்தில் போனது...

"சார்" என அந்த பெண்ணும் ஆணும் ஓடி வந்து ருத்ரனின் முதுகில் வழியும் இரத்தத்தின் மீது துணியை வைத்து அழுத்தினர்... அவனுக்கு இரத்தம் அதிகமாக வழிந்தது...உடம்பில் சிறு சிறு காயங்களும் காணப்பட்டது...

எங்கிருந்தோ வந்த குண்டு ஒன்று அந்த பெண்ணின் நெற்றியை துளைத்து வெளியேற, அவள் உயிர் வெளியேறி உடல் கீழே சரிந்தது ...தன் மனைவியின் உயிர் கண் முன்னே சென்றும் கூட அந்த ஆண் ருத்ரனை காப்பாற்ற தான் போராடினான்...

"என்னை அப்பறம் பாக்கலாம் ..முதல்ல உன் பொண்டாட்டிய பாரு" என ருத்ரன் கூற "அவ போய்ட்டா சேர்" என்றான் அந்த ஆண்... ருத்ரனுக்கு கத்தி மேல் நடக்கும் தருணம் அது....அந்த பெண்ணின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ருத்ரன் மூன்று நான்கு பேரை சுட்டு வீழ்த்தினான்... ரவியும், அசோக்கும் மறைந்திருந்து தாக்கினர்... "நான் சொன்னதெல்லாம் எங்க" என ருத்ரன் கேட்க அந்த ஆண் பல நவீன ரக துப்பாக்கிகளை கொண்ட பையை ருத்ரனிடம் கொடுத்தான்....

ருத்ரன் ,அசோக் மற்றும் அந்த ஆண் என மூவரும் இணைந்து ரவியின் ஆட்களில் பாதி பேருக்கு பரலோகம் செல்ல வழி காட்டி விட்டனர்... ருத்ரனின் அருகில் வந்த அசோக்" நான் போலீஸ்கு இன்பார்ம் பண்ணிட்டேன் ...இப்போ லந்திடுவாங்க" என கூற;" ஓஹ் "என ஒரு மார்க்கமாக கூறிய ருத்ரன், முகத்தில் துணியை கட்டி கொண்டு அசோக்கையும் அந்த ஆணையும் முகத்தை மூட சொல்லி உத்தரவிட்டான்... மூவரும் கண்ணை தவிர முகத்தில் அனைத்தையும் மூடி இருந்தனர்... ருத்ரன் தூரமாக நின்று தங்களை மறைந்து தாக்கும் ரவி மற்றும் எசக்கியை இனம் கண்டு கொண்டான்... துப்பாக்கியில் குளோரோபார்ம் வாயு நிறைந்த குண்டுகளை நிரப்பி அவர்களைப் பார்த்து குறி வைத்தான்.... சரியாக குண்டு அவர்களை அடைந்து இடத்தை முழுவதும் வாயுவால் நிரப்பியது... ரவி ,எசக்கி அவர்களின் கூலியாட்கள் என அனைவரும் மயங்கினர்...

உடனே ருத்ரன் தன் ஆள் மற்றும் அசோக்கின் உதவியுடன் அவர்கள் அனைவரையும் கயிற்றால் பிணைத்து, விஷ வாயு நிரப்பிய கிடங்கினுள் தள்ளி சிலிண்டர் ஒன்றை திறந்து விட்டு வெளியே வர போலீஸும் வந்தது...

ருத்ரன், அசோக் மற்றும் அந்த ஆணை போலீஸ் சுற்றி வளைத்து நடந்தது பற்றி கேட்கும் தருணம் ருத்ரனோ யாரும் அறியா வண்ணம் மெதுவாகா தீப்பொறி ஒன்றை கிடங்கினுள் தூக்கிப் போட்டான்.... பெரிய வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டது ...ஒவ்வொருவரும் தனித்தனியாக போய் விழுந்தனர்..

பின்னர் மெதுவாக எழுந்து போலீஸார் நடந்ததை எல்லாம் வாக்குமூலமாக பதிவாக்கி கொண்டு, சம்பவ இடத்தை புகைப்படம் மற்றும் வீடியோவாக சேகரித்து மேலதிக விசாரணைக்காக ருத்ரன் குழுவினரை காவல் நிலையத்திற்கு வர சொன்னார்கள்......

ரவி ,எசக்கி மற்றும் அவர்களது கூட்டத்தினர் அழிக்கப்பட்டிருந்தனர்... ருத்ரனின் ரகசிய உளவாளிகள் மூலம் ரவியின் பெற்றோர் இருப்பிடம் அறியப்பட்டது.. அவர்களிடம் இருந்து வெயினி கண்டுபிடித்த தொல்பொருள் மீட்கப்பட்டது..

தொடரும்....
 

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -23)
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top